திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் சரவணன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தையல் தொழிலாளி. இவருக்கு கார்த்திகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் இரண்டாவது ஆக சித்திரை செல்வி (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் இருக்கும் நிலையில் இரு மனைவிகளையும் தனித்தனி வீட்டில் வைத்து சரவணன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சித்திரை செல்வியின் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு டீக்கடையில் சலீம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் சித்திரை செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நாளடைவில் கள்ள தொடர்பாக மாறியுள்ளது.

இது தொடர்பாக சரவணன் எனக்கு தெரிய வந்த நிலையில் அவர் தன் மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் சலீம் மற்றும் சித்திரை செல்வி இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது சரவணன் அதை பார்த்துவிட்டார். அதன் பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில் சிறிது நேரம் கழித்து வந்து தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரை செல்வி தன் கணவரை காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சித்திரைச் செல்வி வீட்டிற்கு சரவணன் சாப்பிடுவதற்காக சென்றபோது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் தன் காதலனை அங்கு சித்திரை செல்வி வரவழைத்தார். பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து சரவணனின் கை கால்களை கட்டி தலையணை வைத்து முகத்தில் அமுக்கி அவரை கொலை செய்தனர். பின்னர் அவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக கார்த்திகா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரவணன் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதைத் தொடர்ந்து சித்திரை செல்வி மற்றும் ஷலீம் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.