திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு விராலிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் வீரய்யன் (35).  இவர் கட்டட பணியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும், இவருடைய மனைவியான அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வந்துகொண்டே இருந்துள்ளது.

இந்த நிலையில், ‘டார்ச்சர்’ செய்த கணவரின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கி மனைவியே கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவி போலீசில் அளித்த வாக்குமூலம் திடுக்கிட செய்துள்ளது. இதையடுத்து அபிராமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.