சென்னை மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா நகர் வ.உ.சி தெருவில் குருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த தினேஷ்குமார் செல்போனில் கேம் விளையாடியுள்ளார். இதனால் குருமூர்த்தி தனது மகனை கண்டித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு படுக்கைக்கு சென்ற தினேஷ்குமார் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் குருமூர்த்தி அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தினேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.