பொதுவாகவே புதிதாக பிரியாணி கடைகளை திறக்கும் போது வித்தியாசமான ஆஃபர்களை கொடுத்து மக்களை வரவேற்பதாக நினைத்து பல சலுகைகள் வழங்கப்படுவதை பார்த்திருப்போம். அதன்படி இங்கு ஒருவர் ஒரு பைசா, ஐந்து பைசா மற்றும் 10 பைசாவை கொடுத்த பிரியாணி வாங்கி செல்லலாம் என்று அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் உரிமையாளர் யாரிடமும் செல்லாத காசு இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ கடை திறந்தவுடன் செல்லாக்காசுகளுடன் மக்கள் கூட்டம் குவிந்ததைக் கண்டு பதரிய அவர் முதலில் வந்த ஐம்பது பேருக்கு மட்டுமே பிரியாணியை கொடுத்துவிட்டு கடையை மூடி விட்டு சென்றார்.