திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்தில்(TN57 N 2410) இடம்பெற்ற டிஜிட்டல் பலகையில் திடீரென சீன எழுத்துக்கள் இடம்பெற்றதால் பயணிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. பலரும் இந்த பேருந்து எந்த செல்கிறது என தெரியாமல் நடத்துனரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இது குறித்து போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டபோது, “பேருந்தின் டிஸ்ப்ளேவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இவ்வாறு தெரிகிறது. விரைவில் சரி செய்து விடுவோம்” என்று கூறினர்.