திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுஅனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல்லில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது