தமிழகத்தில் டிசம்பர் 9ஆம் தேதி இன்று 3000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். குறிப்பாக புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயிரம் மழைக்கால சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மழைக்கால சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இந்த முக ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பருவமழை காலமாக உள்ள காரணத்தால் டிசம்பர் ஒன்பதாம் தேதி இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் 3000 இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ள நிலையில் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.