திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் ராமகிருஷ்ணன் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். ‌ இவர் தன்னுடைய உறவினர் சுப்பிரமணி (47) என்பவருடன் சேர்ந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்ட நிலையில் மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது. இந்தக் கோர விபத்தில் சுப்பிரமணி மற்றும் ராமகிருஷ்ணன் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக செம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.