திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு பக்தர்கள் அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 1000 அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோவிலில் நேர்த்திக்கடனாக அரிவாள் செலுத்துவது நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான திருவிழா தை 3 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த திருவிழாவில் 1000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். அதோடு இம்முறை 3000 அரிவாள்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.