விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரெட்டணை கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு பள்ளியின் முதல்வரான கார்த்திகேயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி வீட்டில் கூற மாணவியின் பெற்றோர் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் கார்த்திகேயன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.