மக்களே உஷார்…! தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நீர் மின் திட்ட நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி சுப்பிரமணியனின் செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல்…

Read more

தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை அருகே அறுவடை நகர் பகுதியில் தங்க நகை பட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இன்று மதியம் ஆலையில் இருக்கும் சேமிப்பு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்ததும் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள்…

Read more

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி… தொழிலாளர் பலி; 2 பேர் மயக்கம்… பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் அருகே இருக்கும் பெரியார் நகர் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஜயம் என்டர் பிரைஸ் என்ற பெயரில் செப்டிக் டேங்க் லாரி மூலம் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சௌரிபாளையம்…

Read more

தவறான தகவல்… கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குபதிவு…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் பெண் டிரைவராக பிரபலமானவர் ஷர்மிளா. இவர் பேருந்தை ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. கடந்த 2- ஆம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் சென்றார். அப்போது ஷர்மிளா போக்குவரத்திற்கு…

Read more

தனி திறன்களை வெளிப்படுத்த போட்டிகள்…. கலையரசி பட்டத்தை வென்ற கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தனி திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு கலைத் திருவிழா நடைபெறும். இதில் மாணவர்களுக்கு நாடகம், கதை ஒப்புவிப்பு, கவிதை, சிற்பம் வடிவமைப்பு, ஓவியம் என பல பிரிவுகளில் போட்டி நடத்தப்படும். கடந்த…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் விடுதியில் தங்கி இருந்த கும்பல்… இளம் பெண்ணுக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒன்பதாம் தேதி நள்ளிரவு ஒரு பெண் விடுதிக்கு வந்து ஊரிலிருந்து வரும் தனது உறவினர்களுக்கு தங்குவதற்கு அறை வேண்டும் என…

Read more

வங்கிக் கணக்கில் பணம் என புதிய மோசடி

கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ஆதரவாக ஐயாயிரம் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோ பார்த்தாலே வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்படும் என்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைக்…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ… பரிதாபமாக இறந்த ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சடைய கவுண்டனூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மணிகண்ட பூபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை பயணிகளை பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டு பொள்ளாச்சி திருப்பூர் சாலை கரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

அபராதம் விதித்த போலீஸ்காரர்…. தாக்குதல் நடத்திய 3 பேர்…. அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் போக்குவரத்து காவல் பிரிவில் ஆனந்த் என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் சாலையில் சக போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்…

Read more

பிரேக் பிடிக்காமல் விபத்தில் சிக்கிய அரசு பேருந்து…. 29 பேர் காயம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமலை டாப் டிவிஷன் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்றது. வால்பாறை வந்தவுடன் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனையடுத்து மீண்டும் பேருந்து புறப்பட்டபோது பிரேக் பிடிக்கவில்லை. இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்த முயற்சி…

Read more

ஓட்டுனரின் கவனக்குறைவு…. வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சாங்காடு பாளையத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கு சைலா என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் சாய்சரண் பெத்தாம்பாளையத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். நேற்று மாலை பள்ளி…

Read more

பெண்ணின் கை, கால்களை கட்டி போட்டு… வாலிபர் செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கல்யாணசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஜோதிஷ், ஹரிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்தது. அந்த வேலைகளை கள்ளக்குறிச்சியை…

Read more

அணையில் குட்டிகளுடன் குளித்த யானைகள்…. வனத்துறையினரின் தீவிர ரோந்து பணி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சில காட்டு யானைகள் வால்பாறை சோலையார் அணையில் உற்சாகமாக குளித்தது. அங்கு தண்ணீர் குறைந்த அளவே இருப்பதால் யானை குட்டிகளும் குளித்தது. இந்நிலையில்…

Read more

நள்ளிரவில் நுழைந்த காட்டு யானைகள்…. வீட்டு கதவுகளை உடைத்து பொருட்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாழியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இரண்டு கூலி தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்தனர். நேற்று நள்ளிரவு குட்டியுடன் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தெருக்களில் அங்கும் இங்கும்…

Read more

வீடியோ எடுத்து மிரட்டிய சமையல் தொழிலாளி…. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். அந்த இளம் பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் சமையல் தொழிலாளியான அகமது(25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.…

Read more

சாலையில் விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. தவிர்க்கப்பட்ட விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் தினமும் வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் அந்த சாலையில் இருக்கும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அந்த பகுதி மக்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்…

Read more

உதவி செய்தது போல நடித்த வாலிபர்கள்…. பெண்ணிடம் இருந்து நகை பறிக்க முயற்சி…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய புத்தூர் பகுதியில் ரேணுகா என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேர் பொருட்கள் வாங்குவது போல நடித்தனர். இதனையடுத்து…

Read more

திடீரென வந்த காட்டு யானை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. பீதியில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் உலா வருகிறது. இந்நிலையில் விராலியூர் பகுதியைச் சேர்ந்த சின்ன குட்டி என்ற முதியவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி அருகே காலை கடன் கழிப்பதற்காக சென்றார்.…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி…. கொடூரமாக கொலை செய்த பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் கட்டிட வேலை பார்க்கும் மணிகண்டன்(25) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மணிகண்டன் தனது பாட்டி நாகாத்தாளின் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து உடல் நலம் மோசமாக இருக்கும் தனது பாட்டியிடம் மணிகண்டன் நிலத்தின் பட்டாவை…

Read more

நண்பருடன் இணைந்து வழிப்பறி…. ஊர் காவல் படை வீரர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ரயில் நிலைய மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பது தெரியவந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கோபிநாத் கோவை…

Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!

கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில், திருச்சி,…

Read more

கடுமையான பனி மூட்டம்…. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர், கருமத்தம்பட்டி பகுதியில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். முக்கியமாக கரூர்- மைசூர் சாலையில் வாகன…

Read more

“ஆதாரங்கள், சாட்சிகள் அழிந்து விடும்”…. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியா அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஆலந்துறை அரசு பள்ளி கலை ஆசிரியர் ராஜ்குமார் ஒரு மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமிக்கு பாலியல்…

Read more

பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜ வீதியில் துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கழிவறையை குறையாக பராமரிக்கவில்லை என கூறி மாணவிகள் பெற்றோருடன் ராஜ வீதியில்…

Read more

தேசிய அளவிலான போட்டி…. சாதனை படைத்த கோவை மாணவி…. குவியும் பாராட்டுக்கள்…!!

டெல்லியில் உள்ள சத்ரசார் ஸ்டேடியத்தில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் 67வது கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியைச் சேர்ந்த…

Read more

மனு கொடுக்க வந்த முதியவர்…. மயங்கி விழுந்து இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பாலசுப்ரமணியம் முதல் தளத்தில் இருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு வெளியேறி…

Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்…. கோவையில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு…!!

தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

5 கோடி மோசடி செய்த குடும்பம்…. பெண்கள் உள்பட நான்கு பேர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கோவை, திருப்பூரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, கோவை லாலி ரோடு பகுதியில் வசிக்கும் பாக்கியலட்சுமி, அவரது மகள் நாகரத்தினம், மகன் மணிகண்டன் ஆகியோர் ஆர்.எஸ் புரத்தில் ஆன்லைன்…

Read more

அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை…. வனத்துறை ஊழியரை விரட்டியதால் அச்சமடைந்த பயணிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சின்ன கல்லார் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை நேற்று முன்தினம் மாலை நேரம் அந்த வழியாக சென்று கொண்டிருந்த…

Read more

போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை…. இரண்டு வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் செந்தூர் நகரில் சட்ட விரோதமாக எரி சாராயம் கடத்தி வந்து போலீஸ் மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.…

Read more

போலி மதுபானம் : வீட்டிலேயே தயாரிப்பு… 2 பேர் கைது…!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தாண்டிபாளையம் செந்தூர் நகரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரகசிய தகவலின் பேரில் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதை கண்டுபிடித்தனர். மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ஜனனி பிரியா தலைமையில், இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர்…

Read more

பேருந்து வழிமறித்த ஒற்றை யானை…. பயந்து அலறிய பயணிகள்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சின்னக்கல்லார் எஸ்டேட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது ஒற்றை யானை ஒன்று பேருந்தை…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. கோவையிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு….!!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து 1.045 டன் பால் பவுடர், 1.5 டன்…

Read more

ஆசிரியர் செய்கிற வேலையா இது…? மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தகுமார் கோவை அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் அதே பள்ளியில் படிக்கும் 9-ஆம்…

Read more

வேலையில் அழுத்தம் : “மனமுடைந்த அரசு ஊழியர் மரணம்” ஈரோடு அருகே சோகம்…!!

கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு டான்சி கழக ஃபோர்மேன் ரங்கசாமி (53) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாணிக்கம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அதிக வேலைப்பளு காரணமாக, மன உளைச்சலில் இருப்பதாக ரங்கசாமி, நேற்று…

Read more

“கை… கால்-களை கட்டி” 66 வயது பாட்டியிடம் கைவரிசை….. கம்பி எண்ண வைத்த இளம்பெண்…!!

கோவை சித்தாபுதூர் அருகே வசித்து வந்த முரளி என்பவர் கடந்த ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மனைவி கோமளம் (66) தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று, கோமளம் வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​இரண்டு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தனர்,…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி….. வட மாநில வாலிபர் கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக சிறுமிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.…

Read more

வீட்டை சுத்தம் செய்ய சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கோபால் நகர் முதல் தெருவில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு மாதத்தில் இரண்டு முறை சென்று லாவண்யா சுத்தம் செய்து வந்தார். சம்பவம்…

Read more

காதல் திருமணம் செய்த மறுநாளே…. கணவருக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார், இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த இளம்பெண் மருத்துவமனையில் செவிலியராக வேலை…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. 6-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏராளமான குளங்கள் நிரம்பியுள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரிஜோஸ்வான்(11) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் இருக்கும்…

Read more

குளத்தில் தவித்த குட்டியானை…. ஜேசிபி மூலம் உதவிய வனத்துறை…. வெளியான காணொளி….!!

கோயம்புத்தூர் கரடிமடை பிரிவு பகுதியில் குட்டி யானை ஒன்று விவசாய குளத்தில் தண்ணீர் குடிக்க முயற்சித்துள்ளது அப்போது நான்கு அடி ஆழம் கொண்ட குளத்திற்குள் தவறி விழுந்து கரையேற முடியாமல் தவித்துள்ளது. இதனை அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரிடம்…

Read more

திருமண கோலத்தில் மாட்டுவண்டியில் வந்த புதுமண தம்பதி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தில் முருகேசன்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆனந்த குமாருக்கும் மேட்டுப்பாவி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் செட்டி பாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் புகுந்த வீட்டுக்கு…

Read more

அண்ணனை பார்க்காத ஏக்கம்…. தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் அருகே எம்.ஆர்.கே நகரில் லாரி டிரைவரான ராஜசேகர் என்பவர் வந்துள்ளார். இவரது மனைவி ஜெயப்பிரியா செட்டிபாளையம் பேரூராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி கடன் பிரச்சனை காரணமாக தலைமறைவாக…

Read more

கோவை குற்றாலத்தில் குறைந்த வெள்ளப்பெருக்கு…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் கோவை குற்றாலம் அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வரத்து இருக்கும். இங்கு கோவை, நீலகிரி மற்றும் இல்லாமல் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில…

Read more

இளம்பெண்ணுடன் பழகுவது தொடர்பாக தகராறு…. நடு ரோட்டில் மோதிக்கொண்ட சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வசிக்கும் 16 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுடன் பழகி வந்தார். அதே இளம் பெண்ணுடன் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணுடன் இரண்டு சிறுவர்களும் அடிக்கடி பேசி வந்ததால்…

Read more

இரு சக்கர வாகனங்கள் மோதல்…. ஜோதிடர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் ஜோதிடர்கள். சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு பேரும் மொபட்டில் ஆனைகட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றனர். பின்னர் ஜோதிடம் பார்த்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நெகமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேன்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும் பக்கத்து கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

சட்டவிரோதமான செயல்…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.…

Read more

குடிபோதையில் தகராறு…. வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்திநகர் மூன்றாவது தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் குடிபோதையில் ஆனந்த் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுள்ளார். இதனை ஜானகிராமன் கண்டித்து…

Read more

நண்பரின் மனைவியுடன் திருமணம்…. தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.கே மார்க்கெட்டில் விருதுநகரை சேர்ந்த மச்ச ராஜா என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் மனைவியுடன் கோவையில் வசித்து வருகிறார். மச்ச ராஜாவும்…

Read more