கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் கட்டிட வேலை பார்க்கும் மணிகண்டன்(25) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மணிகண்டன் தனது பாட்டி நாகாத்தாளின் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து உடல் நலம் மோசமாக இருக்கும் தனது பாட்டியிடம் மணிகண்டன் நிலத்தின் பட்டாவை கொடுக்குமாறு தொந்தரவு செய்தார். ஆனால் மூதாட்டி பட்டாவை கொடுக்க மறுப்பு தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த மணிகண்டன் தனது மூதாட்டியின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளார். இதில் கடுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.