கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ரயில் நிலைய மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பது தெரியவந்தது. கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கோபிநாத் கோவை மாநகரில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கோபி தனது நண்பரான அனுஷ் என்பருடன் இணைந்து கடந்த மாதம் பெண் ஒருவரிடம் கைப்பேசியை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் அனுஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கோபிநாத்தை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.