கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்செந்தூர், நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், சேலம், ஊட்டி போன்ற ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.