திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கண்ணம்பாளையத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் ஹேமச்சந்திரன் என்பவர் படித்து வந்தார். இவர் சக மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 20-ஆம் தேதி ஹேமச்சந்திரன் கண்ணம்பாளையத்தில் இருக்கும் ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து வழக்கம்போல தூங்க சென்ற ஹேமச்சந்திரன் மறுநாள் காலை அசைவு இல்லாமல் கிடந்ததை பார்த்து நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பரோட்டா சாப்பிட்டால் மாணவர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.