கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக கஞ்சா குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 29 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் புகையிலை, குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கடந்த இரண்டு மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.