கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு டான்சி கழக ஃபோர்மேன் ரங்கசாமி (53) தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈரோடு மாணிக்கம்பாளையம் குடியிருப்புப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அதிக வேலைப்பளு காரணமாக, மன உளைச்சலில் இருப்பதாக ரங்கசாமி, நேற்று முன்தினம் உறவினர் வீட்டில் இருந்த தனது மனைவி ராதாவிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

பின் ஆறுதல் கூறி அவரை மனைவி வீட்டிற்கு அனுப்பி வைக்க,  மாலையில் திரும்பி வந்து பார்க்கையில்,  அவர்கள் வீடு சூறையாடப்பட்டதையும், ரங்கசாமி அழைப்புகளுக்கு பதிலளிக்காததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து,  அக்கம் பக்கத்தினர் உதவியை நாடி பூட்டியிருந்த குளியலறையை உடைத்து பார்க்கையில்,

அவர்  தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்து போனார். இதையடுத்து  உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போதிலும், ரங்கசாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின் ரங்கசாமி டான்சி  நிறுவனத்தின் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளதால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.