டெல்லியில் உள்ள சத்ரசார் ஸ்டேடியத்தில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் 67வது கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி மோனி ஸ்ரீ 17 வயதிற்கு உட்பட்ட மாணவியருக்கான தனிநபர் குமித்தே போட்டியில் 48 கிலோ எடைக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

அந்த மாணவிக்கு 3 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. தேசிய அளவில் சாதனை படைத்த மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.