கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் போக்குவரத்து காவல் பிரிவில் ஆனந்த் என்பவர் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் சாலையில் சக போலீசாருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை ஆனந்த் தடுத்து நிறுத்தியுள்ளார். அவர் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததற்கு அபராதம் கட்டுமாறு கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மூன்று பேரும் ஆனந்தை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆனந்தை தாக்கிய அப்துல் கலாம், ஹபீப் அலி, முகமது ஹுசைன் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.