கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டியூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி முதல் பெருமாளை காணவில்லை. இதனால் பெருமாளின் மனைவி மோனிகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பெருமாளுக்கும் அவரது நண்பர் முரளியின் மனைவி வடிவுக்கரசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதனால் முரளி,அவரது நண்பர்களான நவீன், தங்கராசு ஆகியோர் பெருமாளை கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் பெருமாளின் சடலத்தை நாகமங்கலம் அருகே இருக்கும் கிணற்றில் புதைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முரளி, நவீன், தங்கராசு ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.