திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியை சேர்ந்த எட்வர்டு(80) என்பவருக்கு சௌந்தரவல்லி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே சென்று உள்ளனர். இதனை தொடர்ந்து கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்த நிலையில் சம்பவத்தன்று சௌந்தரவல்லி காலை உணவு தயாரிக்க தாமதமாகியதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் வீட்டின் அருகில் இருக்கும் மரத்தின் தூக்கிட்டு தாரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.