தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பனிமய மாதா கோவில் தெருவில் ஜெயரின்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி ஜெயின் தனது வீட்டிற்கு முன்பு சிகரெட் பற்ற வைத்துள்ளார். அப்போது அவர் தூக்கி எறிந்த தீக்குச்சி அருகில் இருந்த பேனர் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த பேனர் முதியவர் மீது விழுந்தது.

இதில் படுகாயமடைந்த முதியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.