எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எம். அருண்குமார், தேர்தல் மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு தலைமறைவாகி, தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனு போதுமான முன்மொழிவோர் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டதால், அக்கட்சி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் அருண்குமார் திடீரெனத் தலைமறைவானது கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அருண்குமார் தலைமறைவானது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அவர் எடப்பாடி பழனிசாமியிடம் பணம் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
TVK’s Edappadi candidate M. Arunkumar has joined the AIADMK in the presence of party general secretary Edappadi K. Palaniswami in Salem on Saturday.
Arunkumar’s nomination for Edappadi had earlier been rejected as it did not have sufficient proposers, while the nomination of… pic.twitter.com/p3Rvshr0WL
— Sneha (@Snehabharathii) August 15, 2026
“>
முன்னதாக அதிமுகவில் இருந்து விலகித் தவெகவில் இணைந்திருந்த அருண்குமார், தற்போது தேர்தலில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களுக்கு இடையே மீண்டும் தனது தாய்மைக் கழகத்திற்கே திரும்பிச் சென்றுள்ளது சேலம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
