தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அடியெடுத்து வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்தும் அவரது குடும்ப சூழல் தொடர்பாகவும் ஒரு ரசிகர் எழுதியுள்ளதாகக் கூறப்படும் உணர்ச்சிகரமான கடிதம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

தவெக தலைவர் விஜய்யின் தீவிர ரசிகராகவும் ஆதரவாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர், சமீபத்திய பேட்டிகளில் கட்சியின் வாரிசு மற்றும் குடும்பப் பொறுப்புகள் குறித்துப் பேசப்பட்ட விஷயங்களைச் சுட்டிக்காட்டி தனது கடுமையான வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

அரசியல் களத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள போதிலும், சில தனிப்பட்ட விவகாரங்களால் ஒட்டுமொத்த உழைப்பும் நற்பெயரும் வைரஸ் போல பரவும் அவதூறுகளால் சிதைந்து போவதாக அந்த மடலில் எச்சரிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களும் குழந்தைகளும் முன்மாதிரியாகப் பார்க்கும் ஒரு தலைவர், இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி மக்களின் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்றும், குடும்பப் பெருமையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவர் மீதும் உள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“>

 

அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களை மையமாகக் கொண்டு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.