கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தக்குடியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடந்த அன்று கிருஷ்ணவேணி தனது வீட்டு வாசலில் கோலம் போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சின்னதுரை, சுரேஷ், அருள், கனகராஜ், மணிகண்டன் ஆகியோர் சாலையில் எதற்கு கோலம் போடுகிறாய் என கேட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் கிருஷ்ணவேணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணவேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கனகராஜ் உட்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.