கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்யாணத்தம் வடக்கு காட்டுக்கொட்டையில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

சம்பவம் நடைபெற்ற அன்று முருகேசன் வேலுவிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.