சென்னையில் 2500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்த பேருந்துகள் அட்டவணையிடைப்பட்ட பேருந்து நிறுத்தங்களின் நிற்காமல் சென்றால் பொதுமக்கள் அது தொடர்பாக புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

அதன்படி 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி நம்பர் மூலம் புகார் அளிக்கலாம். மேலும் பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண், பதிவு எண், நேரம், நிற்காமல் சென்ற பேருந்து நிறுத்தம் போன்றவற்றை குறிப்பிட்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.