நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது நமது பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணப்பரிமாற்ற மோசடி செய்வார்கள் என கூறுகின்றனர். Money laundering, போதை பொருள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற விஷயங்களில் பணப்பரிவர்த்தனைக்கு இந்த வங்கி கணக்கை பயன்படுத்தலாம் என எச்சரித்துள்ளனர். இதுபோன்று ஏதும் நடந்தால் வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும்.