இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி கேரளா பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் ஓட்டு போட்ட போது இடது கை ஆள்காட்டி விரலில் தடவப்பட்ட மை இன்னும் மறையவில்லை. இதைக் காரணம் காட்டி உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் வாக்களிக்க செல்லவில்லை.