சூடான இரும்பு கம்பியால் காதலியின் பெயரை கன்னத்தில் எழுதிய சம்பவம்  உத்திரபிரதேசம் லக்கிம்பூர்-கீரியில் நடந்துள்ளது. அமன் என்ற வாலிபர் 25 வயது இளம் பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த அமன், இரும்பு கம்பியை சூடாக்கியுள்ளார்.

பின்னர் அதனை வைத்து காதலியின் கன்னத்தில் வலுக்கட்டாயமாக தனது பெயரை (AMAN) எழுதியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததையடுத்து, காதலன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.