பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் போது பிஷ்னோய் சகோதரர்களுக்கு துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இதைத்தொடர்ந்து பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயிக்கு தற்போது  லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.