திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டியில் சின்ன கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று இரவு முதல் மதன் குமார் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

இந்நிலையில் பள்ளப்பட்டி விளக்கு அருகே புளியந்தோப்பில் தூக்கில் சடலமாக மதன்குமார் தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மதன்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.