திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீதாகவுண்டன்பட்டியில் ஒரு ஏக்கர் 5 சென்ட் நிலம் அமைந்துள்ளது. அந்த நிலத்தை பாகம் பிரித்து தருமாறு அவரது உறவினர் வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் கருப்பு சாமியிடம் அடிக்கடி தகராறு செய்தனர்.

இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது வெள்ளைச்சாமி கோபத்தில் கருப்பசாமி, அவரது சகோதரர் பண்ணைக்காரன், அண்ணன் மகன் மகாராஜன் ஆகியோரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெள்ளைச்சாமி, அவரது மனைவி தங்கம், மகன்கள் பார்த்தசாரதி, முனியப்பன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.