திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் வத்தலகுண்டு நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்தானிகபிரபு என்பவர் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி சத்யபிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்து நடந்த நேரம் அந்த வழியாக சென்ற ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி விபத்து குறித்து உடனடியாக தகவல் தெரிவித்து மீட்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு சத்யபிரியாவின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே படுகாயமடைந்த ஸ்தானிகபிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.