கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர், கருமத்தம்பட்டி பகுதியில் இன்று கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். முக்கியமாக கரூர்- மைசூர் சாலையில் வாகன ஓட்டிகள் மெதுவாக ஊர்ந்து சென்றனர். கடுமையான பனி மூட்டத்திற்கு நடுவே வாகனம் ஓட்ட சிரமப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.