திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேரியந்தல் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பாபு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 30 பவுன் தங்க நகை, இரண்டு வெள்ளி கொலுசுகள், 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.