கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாச்சாங்காடு பாளையத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் தொழிலாளி. இவருக்கு சைலா என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் சாய்சரண் பெத்தாம்பாளையத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்துள்ளான். நேற்று மாலை பள்ளி முடிந்து சாய்சரண் வேனில் வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து வேனில் இருந்து கீழே இறங்கி சிறுவன் சாலையில் நடந்து சென்றான். அப்போது பள்ளி வேன் ஓட்டுனர் மணி கவனக்குறைவாக வேனை திருப்பினார்.

இதனால் பின் சக்கரத்தில் சிக்கி சாய்சரண் படுகாயம் அடைந்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சாய்சரணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய வாகன ஓட்டுனர் மணியை தேடி வருகின்றனர்.