கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகள் மற்றும் பேத்தியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பாலசுப்ரமணியம் முதல் தளத்தில் இருக்கும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு வெளியேறி சென்றார். அப்போது திடீரென பாலசுப்பிரமணியம் மயங்கி விழுந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரிசோதனை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டவுடன் முதியவரின் மகளும், பேத்தியும் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனு கொடுக்க வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.