திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பழனி ரயில் நிலைய சாலை, பேருந்து நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. மேலும் கனமழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது வரதமா நதி நீர்த்தேக்கத்திற்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுபோக பாலாறு அணையும் நிரம்பி வருகிறது. கனமழை காரணமாக பச்சையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.