திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மாதா போரில் புகழ்பெற்ற ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

கடந்த 3 நாட்களாக ஆறு கால பூஜை நடைபெற்றது. இதனையடுத்து குன்றத்திலிருந்து கும்பாபிஷேக கலச தீர்த்தத்தை எடுத்து வந்து மேளதாளம் முழங்க கும்ப கலசத்திற்கு கும்பாபிஷேக தீர்த்தம் விடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.