திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு  அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் உற்சவ மூர்த்திக்கும் பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மார்கழி மாதம் என்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.