சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 260 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவழித்துள்ளனர். தற்போது தண்ணீரில் மூழ்கி பயிர் அழுகி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணக் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.