கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஹரிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆனந்தகுமார் கோவை அருகே இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தகுமார் அதே பள்ளியில் படிக்கும் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.