திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வீட்டு வேலையை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக தோட்டத்திற்கு ஓட்டி சென்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு வடிவேல் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்து 22 பவுன் தங்க நகை, 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வடிவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.