கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக சிறுமிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பின்னர் அந்த வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்ததும் ஜார்கண்ட் மாநிலதிற்கு வாலிபர் தப்பி சென்று விட்டார்.

இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை கர்ப்பம் ஆக்கியது பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று பிரகாஷை கைது செய்து கோவைக்கு வந்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.