கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கோபால் நகர் முதல் தெருவில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு மாதத்தில் இரண்டு முறை சென்று லாவண்யா சுத்தம் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று லாவண்யா வீட்டில் சுத்தம் செய்ய சென்றபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ராஜேஸ்வரி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்படி ராஜேஸ்வரி அங்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெண்கல பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட புகழேந்தி, கிருஷ்ணன், பூபதி, முருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.