கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏராளமான குளங்கள் நிரம்பியுள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரிஜோஸ்வான்(11) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அந்த பகுதியில் மழை பெய்ததால் ஜெரிஜோஸ்வான் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இதனையடுத்து நண்பர்கள் சிலருடன் குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் ஜெரிஜோஸ்வான் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு ஜெரிஜோஸ்வானின் உடலை மீட்டனர். பின்னர் சிறுவனை உடன் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.