கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தெய்வ சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அந்தோணி ராஜ் மாற்று திறனாளி ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்தோணி ராஜ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

இந்நிலையில் அந்த பகுதியில் இருக்கும் தரை கிணற்றில் இருக்கும் தண்ணீரில் மூழ்கி அந்தோணி ராஜ் இறந்து கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்தோணி இராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.