கடலூர் மாவட்டத்தில் உள்ள புது குப்பத்தில் குழந்தைகள் மையம் அமைந்துள்ளது. இங்கு 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர் சத்துமாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர் அலறியடித்துக் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்.

இதுகுறித்து பணியாளர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பு லாவகமாக பிடித்தனர் இந்த சம்பவத்தால் பொதுமக்களும், பெற்றோர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.