கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் ஆன்லைன் செயலி நிறுவனத்திற்கு ஆதரவாக ஐயாயிரம் மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூடியூபில் வீடியோ பார்த்தாலே வங்கிக் கணக்கில் பணம் அனுப்பப்படும் என்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் கூடியுள்ளனர். அவர்கள் அந்நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.